பூஜையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உயிர் பலி; பேயோட்டும் 25 வயது நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பூஜையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உயிர் பலி; பேயோட்டும் 25 வயது நபர் கைது!


மாத்தளை - லக்கல, தாஸ்கிரிய பகுதியில் பரிகார பூஜையொன்றில் பெண்ணொருவர் உயிரிழந்ததையடுத்து சடங்குகளை செய்த பேயோட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த பிரதேசத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (16) மாலை முதல் நேற்று சனிக்கிழமை காலை வரை பூஜைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் பங்கேற்றதாகவும் தெரியவந்துள்ளது.


அவர்களின் ஒரு பெண் திடீரென சுகவீனமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


கல்கிரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


சடங்கு செய்த பேயோட்டுபவர், சடங்கு செய்யும் போது 21 இளநீரை மூன்று நபர்களுக்கு அவ்வப்போது குடிக்க கொடுத்துள்ள நிலையில், அதில் ஒரு பெண் திடீரென நோய்வாய்ப்பட்டார்.


அதன்போது குறித்த பேயோட்டி அந்த பெண்ணுக்கு மஞ்சள் தூள் கலந்த தண்ணீரை குடிக்க கொடுத்துள்ளார்.


அதனை அருந்திய பெண் கடும் சுகவீனமடைந்து தாஸ்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.


சம்பவம் தொடர்பில் 25 வயதான பேயோட்டும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.