ஹெரோயின் பாவனை; 10 வயது சிறுவன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹெரோயின் பாவனை; 10 வயது சிறுவன் கைது!

ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் யாழ். – கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த பாடசாலையை விட்டு இடைவிலகிய குறித்த சிறுவன் ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளார். 


இச் சிறுவன் தொடர்பில் கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அந்தச் சிறுவன் ஊசி மூலம் ஹெரோயினை உடலில் ஏற்றிக் கொள்ளும் வேளையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தன்னைப் போலவே வேறு பல சிறுவர்களும் இவ்வாறு ஹெரோயின் நுகர்வில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது அச் சிறுவன் வெளிப்படுத்தியுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.