பாடசாலை உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவன்!


பாடசாலை உபகரணங்கள் வாங்கித் தருவதாக ஏமாற்றி 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை மொரட்டுவ - எகொடஉயன காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹிரண பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரென தெரிவிக்கப்படுகிறது.


பாதிக்கப்பட்ட சிறுவன் எகொட உயன ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சந்தேகநபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள அதேவேளை, எகொட உயன காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.