கடும் மழை காரணமாக தடையான நேற்றைய போட்டி இன்று நடைபெறும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடும் மழை காரணமாக தடையான நேற்றைய போட்டி இன்று நடைபெறும்!

16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (29) இடம்பெறும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் போட்டி இலங்கை நேரப்படி நேற்றிரவு 7.30 மணியளவில் ஆரம்பமாக திட்டமிடப்பட்டிருந்தது.


எனினும், ஹகமதாபாத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக போட்டி தாமதமானதாக அறிவிக்கப்பட்டது.


முன்னதாக நேற்றிரவு 9.40 மணியளவில் போட்டியை ஆரம்பிக்க முடியுமாயின் 20 ஓவர்கள் விளையாட முடியும் என தீர்மானிக்கப்பட்டது.


போட்டி ஆரம்பமாவதில் இன்னும் தாமதமாகுமாயின் ஓவர்கள் குறைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.


அதேபோல், நள்ளிரவு 12.06க்கு முன்னர் போட்டி ஆரம்பிக்கக்கூடிய நிலைமை காணப்படுமானால், 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தி போட்டி நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


எவ்வாறாயினும், இன்னும் மழை இடைவிடாது பெய்து வருவதனால் இறுதிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.