ஊடகங்கள் தனது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக அமைச்சர் காஞ்சன புகார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊடகங்கள் தனது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக அமைச்சர் காஞ்சன புகார்!


தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறியதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 


இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் விஜேசேகர மேலும் கூறுகையில், 


பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதற்கும், பிரசுரிப்பதற்கும் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன் அழைக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.


இலங்கையின் எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவது தொடர்பான பொய்யான செய்திகளை வெளியிட்டு தனது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறியதாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி அலைவரிசையை உள்ளடக்கிய உள்ளுர் ஊடக நிறுவனம் ஒன்றின் மீது எம்.பி குற்றம் சுமத்தியுள்ளார்.


மேலும் பல ஆன்லைன் செய்தி இணையதளங்கள் சமூக ஊடக தளங்களில் தன்னைப் பற்றிய தவறான தகவல்களைப் பகிர்வதாகவும் பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.