advertise here on top
Join yazhnews Whatsapp Community

காணாமல் போயிருந்த இருவர் சடலமாக மீட்பு!


மினுவாங்கெட - வாரியபொல பகுதியில் இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று (12) கண்டெடுக்கப்பட்டன.


வாரியபொல பிரதேசத்தில் வயல் ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள நீர் நிரம்பிய புதைக்குழியொன்றிலிருந்து இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


குறித்த நபர்கள் 24 மற்றும் 34 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.


குறித்த இருவரும் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருந்த இருவரென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.