கைபேசிகளை எப்போதும் முழுமையாக சார்ஜ் செய்து வைக்குமாறு கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கைபேசிகளை எப்போதும் முழுமையாக சார்ஜ் செய்து வைக்குமாறு கோரிக்கை!


நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் கடந்த ஐந்து நாட்களில் 428 குடும்பங்களைச் சேர்ந்த 1,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.


அத்துடன், இதில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், சீரற்ற வானிலையினால் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.


அனர்த்த பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் கைபேசிகளை எப்போதும் முழுமையாக மின்னேற்றம் (சார்ஜ்) செய்து வைத்திருக்குமாறு கோரப்பட்டுள்ளது. ஏனெனில் செயலில் உள்ள கைபேசி இணைப்பு பேரழிவு ஏற்படுமாயின் உதவிகளை பெறுவதற்கு இலகுவாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.