மேலுமொரு இலங்கை பெண் மாடியில் இருந்து விழுந்து பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலுமொரு இலங்கை பெண் மாடியில் இருந்து விழுந்து பலி!


மலேசியாவில் பணியாற்றிவந்த இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.


குருநாகல் - கொபேகனே, அரலுகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


கடந்த வருடம் டிசம்பர் 18ஆம் திகதி, மாலபேயில் வசிக்கும் தனது நண்பர் ஒருவரின் ஊடாக சுற்றுலா விசாவில் இப்பெண் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில், கடந்த 23ஆம் திகதி, வீட்டில் வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும், வேறு இடத்தில் தற்போது பணியில் இணைந்துள்ளதாகவும் கணவரிடம்  அப்பெண் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.


இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று (24) இரவு அவர் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் இரண்டாவது மாடியின் ஜன்னலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வீட்டாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


எனினும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, அண்மையில் சிங்கப்பூரில் இலங்கை பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பொன்றிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.


புத்தளம் - மொடமுல்ல, உலவெலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த இந்த பெண், தான் வேலை செய்த வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக முன்னதாக தெரிவித்திருந்ததாக வீட்டார் தெரிவித்தனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.