இறைவரித் திணைக்களத்துக்கு இலக்கைத் தாண்டி வருமானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இறைவரித் திணைக்களத்துக்கு இலக்கைத் தாண்டி வருமானம்!


முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், தமது வரி வருமான இலக்கைத் தாண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


இந்த வருடத்தின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இலக்கு வருவாயை விட 105% அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


ஊராபொல பிரதேசத்தில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.


இன்று ஒரு தேசிய நாளிதழில் முதல் காலாண்டில் எதிர்பார்த்த வருவாயில் 19% மட்டுமே ஈட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று அமைச்சர் கூறினார்.


மேலும், முதல் காலாண்டில் சுங்கத்துறை எதிர்பார்த்த வருவாயில் 89% ஈட்டியுள்ளதாகவும், மதுவரி திணைக்களம் 64% வருமானம் ஈட்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.மேலும் வாசிக்க  


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.