இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டுக்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டுக்கொலை!


கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய பாலி எனப்படும் இக்பால் என்ற தீவிரவாதி பாகிஸ்தான் பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளார்.


அவர் தெஹ்ரீக்-இ-தலிபான் (TTP) அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.


இந்த நபர் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உள்ள தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர்.


கொல்லப்பட்ட நபர் பயங்கரவாதம், கொலை மற்றும் பொலிஸ் அதிகாரிகளைக் கடத்துதல் போன்ற வழக்குகளில் தேடப்பட்டவர் என்று கூறப்படுகிறது.


இந்தநிலையில், கைபர்-பக்துன்க்வா பொலிஸ் தலைமையதிகாரி- அக்தர் ஹயாத் கான், தேடுதல் ஒன்றின்போது, இக்பால், பொலிஸார்  மீது தாக்குதல் நடத்தியபோது பொலிஸார் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் இக்பால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.