புத்தர் சிலைக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட சிசு! கண்டி பகுதியில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புத்தர் சிலைக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட சிசு! கண்டி பகுதியில் சம்பவம்!


எல்கடுவ ஸ்ரீ மலியதேவ விகாரையில், புத்தர் சிலைக்கு அருகில், பிறந்து 5 நாட்களேயான சிசு ஒன்றை பெற்றோர் கைவிட்டுச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த விகாரையில் புத்தர் சிலைக்கு அருகில் சிசு ஒன்று இருப்பதாக வத்தேகம காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சிசு சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசுவின் பெற்றோரை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் குழந்தைகளைக் கைவிடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் குழந்தைப் பெட்டிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

புதிதாகப் பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாத அல்லது அந்த குழந்தைகளில் விருப்பமில்லாத பெற்றோர்கள், குழந்தைகளை அரசின் பொறுப்பில் விட்டுச் செல்லும் நோக்கியிலேயே குழந்தை பெட்டிகளை அறிமுகப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அண்மைய வருடங்களில் 60க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தமது குழந்தைகளை வீதியில் கைவிட்டச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன் கடந்த ஆறு வருடங்களில் பல்வேறு காரணங்களால் குறைந்தது 80 சிறுவர்கள் அவநம்பிக்கையான பெற்றோரால் கொல்லப்பட்டுள்ளதாகவும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்தே குழந்தை பெட்டிகளை அறிமுகப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் என்.ஐ லியனகே தெரிவித்தார்.

இந்நிலையில் கைக்குழந்தைகளை 'குழந்தை பெட்டிகளில்' விட்டுச் செல்ல விரும்பும் பெற்றோருக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் ஆணையாளர் கூறியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.