பெண்ணொருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோக முயற்சி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெண்ணொருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோக முயற்சி!


முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதி ஒன்றில் கண்ணிவெடி அகற்றும் மனித நேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் குடும்பப் பெண்ணொருவர் காடையர்களால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


முல்லைத்தீவு எல்லைப்பகுதியில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பெண் ஊழியர் ஒருவர் காட்டிற்குள் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை சப்பாத்து அணிந்து முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் குறித்த பெண்ணை காட்டிற்குள் கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோக முயற்சியினை மேற்கொண்டுள்ளனர்.


இந்நிலையில் இருவரின் பிடியில் இருந்து பெண் தப்பித்து வீதிக்கு வந்து, அங்கு பணியாற்றும்  ஏனையவர்களை அழைத்துள்ளார்.


இந்நிலையில் குறித்த காட்டுப்பகுதியில் பெண்ணினை கடத்திய இருவரும் தப்பி சென்ற நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவந்து மருத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் கொக்கிளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


-செ.கீதாஞ்சன்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.