குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சுட்டுக் கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சுட்டுக் கொலை!


ஹம்பாந்தோட்டை, சுச்சி கிராமத்தில் நேற்று (21) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


ஹக்மன கொடிதுவக்குகே சாகர என்ற 38 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.


அவர் தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.


துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த நபர், ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர் கொலைக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிணையில் வெளியில் வந்தவரென காவல்துறை தகவல் மூலம் தெரியவந்துள்ளது.


சந்தேகநபர்களை கைது செய்ய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.