காணாமல் போயிருந்த நான்கு சிறுவர்கள் கண்டுபிடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காணாமல் போயிருந்த நான்கு சிறுவர்கள் கண்டுபிடிப்பு!


காலி - நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேசத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்று காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அவர்கள் இன்று (14) அதிகாலை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பில் காலி - நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேச பொலிஸ் நிலையத்திற்கு எமது ஊடக பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போது, காணாமல்போனதாக கூறப்படும் நான்கு சிறுவர்களும் இன்று காலை கிடைக்கப்பெற்றுள்ளதாக குறித்த நான்கு சிறுவர்களின் தாய்மார்களில் ஒருவர் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதன்படி, காணாமல் போனதாக கூறப்படும் நான்கு சிறுவர்களும் தமது வீட்டு சுற்றுச்சூழலிலே இருந்ததாக பொலிஸாருக்கு குறித்த தாய் தெரிவித்துள்ளார்.


மேலும், காணாமல் போனதாக கூறப்படும் நான்கு சிறுவர்களின் பெற்றோர்களும் நெலுவ பிரதேசத்திலுள்ள தோட்டங்களில் தற்காலிகமாக தொழில் செய்வதற்காக மியானதுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கி தங்கியிருந்துள்ளனர்.


இது தொடர்பிலான விசாரணைகளை காலி - நெலுவ தெல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதன்போது அண்மை நாட்களாக நாடளாவிய ரீதியில் சிறுவர் கடத்தல்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.


இதற்கமைய நேற்றைய தினமும் முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இரு இளைஞர்கள் இணைந்து சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்டுள்ள போது சந்தேகநபரான இளைஞரொருவரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.