குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!


முற்பதிவு செய்துகொண்டோருக்கு மாத்திரமே கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருமாறு பொது மக்களிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.


முற்பதிவு செய்துகொள்ளாதவர்கள் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருவதனை தவிர்க்குமாறு குறித்த திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.


எனினும், மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல உள்ளவர்கள் மற்றும் இரண்டு அல்லது மூன்று வார விடுமுறையில் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்து, கடவுச்சீட்டை தயார்ப்படுத்திக்கொள்ள உள்ளவர்கள் அதற்கான உரிய ஆவணங்களை காண்பித்து கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் இரு வாரங்களின் பின்னர் இலகுவில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கான முறைமை ஒன்றை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அண்மைய நாட்களாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்னால் நீண்ட வரிசைகளை அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.