அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகள்!


அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகளை ஸ்தாபிக்க அமைச்சரவை நேற்று (08) அங்கீகாரம் வழங்கியுள்ளது.


அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.


அதன்படி, இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டினருக்காக, நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் இவ்வாறான கட்டணம் செலுத்தும் அறைகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.


அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகள் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு முன்மொழிவில் தெரிவித்திருந்தார்.


தனியார் வைத்தியசாலைகளில் செலவு அதிகமாக இருப்பதால், அரச வைத்தியசாலைகளிலும் கட்டணம் செலுத்தும் அறைகளை ஸ்தாபிக்குமாறு பொதுமக்கள் வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த திட்டம் முன்மொழியப்படுவதாக ஜனாதிபதி பாதீட்டு உரையில் தெரிவித்தார்.


அதன்படி, முதற்கட்டமாக தேசிய வைத்தியசாலைகளில் இந்த கட்டணம் செலுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.