advertise here on top
Join yazhnews Whatsapp Community

75 வயதுடைய பெண்ணை துஷ்பிரயோகம் செய்த நபரை தேடும் பொலிஸார்!


75 வயதுடைய வயோதிப பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


நேற்றிரவு (09) சம்பவம் இடம்பெற்ற போது சந்தேகநபர் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


51 வயதுடைய நபர், பேசும் சாக்குப்போக்கில் அந்தப் பெண்ணை அணுகி, மானபங்கம் செய்ய முயன்றுள்ளார்.


எனினும், பிரதேசவாசிகள் கண்டதையடுத்து, குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.


பாதிக்கப்பட்ட பெண் முதலில் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பதுளை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.