இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாம் தொகுதி 20 இலட்சம் முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்க கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த முட்டைகளின் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதன் பின்னர் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொதலாவல தெரிவித்துள்ளார்.
20 இலட்சம் முட்டைகள் கடந்த 29ஆம் திகதி நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அதன் மாதிரி பரிசோதிக்கப்பட்டு சந்தைக்கு விநியோகிக்க அனுமதி வழங்க 10 நாட்கள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.