ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை!


பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள்  வினாத்தாள் திருத்தும் பணிக்கு செல்ல மறுத்தால் அவசரச் சட்டத்தின் கீழ் கல்வி அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


குழந்தைகளின் கல்வியை பணயக் கைதிகளாக ஆக்குவதற்கு இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதி விக்ரமசிங்க மேலும் வலியுறுத்தினார்.


இன்று (19) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.