எதிர்வரும் ஆறு மாதத்தில் டொலரின் பெறுமதி ஆயிரம் ரூபாவினை எட்டும்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் ஆறு மாதத்தில் டொலரின் பெறுமதி ஆயிரம் ரூபாவினை எட்டும்?


அமெரிக்க டொலரின் பெறுமதி ஆயிரம் ரூபாவினை எட்டும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தியின் பௌத்த மத விவகாரப் பிரதானி கலாநிதி தனவர்தன குருகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்திற்கு டொலர் திரட்டிக் கொள்வதற்கான சரியான முறைகள் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எதிர்வரும் ஆறு மாத காலப் பகுதியில் அமெரிக்க டொலரின் பெறுமதி ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக உயர்வடையும் என அவர் தெரிவித்துள்ளார்.


டொலரின் பெறுமதி ஆயிரம் ரூபாவினை எட்டும்! தனவர்தன குருகே | Guruge Sajith Dollar 1000 Rs


அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் மறைகரமாக ராஜபக்சர்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களின் கைப்பாவையாக இயங்கி வருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.


ரணில் ஆட்சி செய்தாலும் ராஜபக்சர்களுக்கு தேவையான வகையில் ஆட்சி முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


கலாநிதி குருகே, எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.  


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.