இன்று முதல் ஆரம்பமாகும் விசேட போக்குவரத்து சேவைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று முதல் ஆரம்பமாகும் விசேட போக்குவரத்து சேவைகள்!

சிங்கள இந்து புத்தாண்டுக்காக கிராமங்களுக்குச் சென்ற மக்கள் கொழும்புக்கு திரும்புவதற்கு தேவையான போக்குவரத்து வசதிகள் இன்று (15) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவைக்கு ஏற்ப 10% முதல் 15% வரையிலான கொள்ளளவு கொண்ட பஸ்களை இன்று இயக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நாளை (16) 50% வெளி மாகாண பேருந்துகள் இயங்கும் எனவும், நாளை மறுதினம் பேருந்துகள் வழமை போன்று இயங்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிராமங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்கு பேருந்துகளை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

அத்துடன், கிராமங்களுக்குச் சென்ற மக்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்து வருவதற்காக பல விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.