
அதன்படி இன்று (21) காலை 8.45 மணியளவில் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவதற்கு மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கத்தோலிக்க திருச்சபை கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து கடுவாப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயம் வரை மக்கள் மதில் ஒன்றை உருவாக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.