advertise here on top
Join yazhnews Whatsapp Community

25 வயதுடைய மகளின் தலையில் அசிட் ஊற்றிய தந்தை!


தனது மகளின் தலையில் அசிட் ஊற்றியதாக கூறப்படும் தந்தை மற்றும் அந்த தாக்குதலில் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான மகள் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புலத் சிங்கள காவல்துறையினர் தெரிவித்தனர்.


சந்தேக நபர் அதிக மதுபானம் அருந்துபானம் அருந்துபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இவர் அடிக்கடி மதுபானம் அருந்திவந்து மகள் மற்றும் குடும்பத்தினரை துன்புறுத்துவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


காயமடைந்த 25 வயதுடைய மகள், இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதுடன், சந்தேகநபரான தந்தை 52 வயதுடையவர் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


சந்தேக நபர் இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர் எனவும், தாக்குதலை நடத்துவதற்காக தொழிற்சாலையிலிருந்து ஆசிட் திருடப்பட்டிருக்கலாம் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.