இன்று நண்பகல் இலங்கையின் ஏழு (07) பகுதிகளுக்கு மேல் சூரியன் நேரடியாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரியன் வடக்கு நோக்கிய ஒப்பீட்டு இயக்கம் காரணமாக ஏப்ரல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று நண்பகல் 12.13 மணியளவில் கொரலவெல்ல, இங்கிரிய, கிரியெல்ல, எம்புல்தெனிய, ஹல்துமுல்ல, ரத்மல்வெஹர மற்றும் வரதெனியாவ ஆகிய பகுதிகளுக்கு மேலே சூரியன் நேரடியாக காணப்படும். (யாழ் நியூஸ்)