முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த இலங்கை அணி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த இலங்கை அணி!

இலங்கை கிரிக்கெட் அணிக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்தில் அமைந்துள்ள ஈடன் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 274 ஓட்டங்களை குவித்தது.

பதில் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணியால் 76 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இலங்கை அணி சார்பாக ஏஞ்சலோ மத்தியூஸ் 18 ஓட்டங்களும், சமிக்க கருணாரத்ன 11 ஓட்டங்களும், லஹிரு குமார 10 ஓட்டங்களும் பெற்றனர்.

நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் எவரையும் 10 ஓட்டங்களைக் கடக்க அனுமதிக்கவில்லை, மேலும் பந்துவீச்சில் நியூசிலாந்து சார்பாக ஹென்றி ஷிப்லி 31 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களையும், டாரில் மிட்செல் மற்றும் பெலேர் திக்னர் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

அதன்படி நியூசிலாந்து அணி 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.