மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதி குறித்து வெளியான மேலதிக தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதி குறித்து வெளியான மேலதிக தகவல்!


இரத்தினபுரி பகுதியில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதியின் மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதற்கமைய படுகொலை செய்யப்பட்ட யுவதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.


சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை சட்ட வைத்திய நிபுணர் முதித குடாகம மேற்கொண்டுள்ளார்.


மேலும் பிரேத பரிசோதனையில் அவரது மரணம் கழுத்தை நெரித்ததால் ஏற்படவில்லை எனவும் அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.


இதனைதொடர்ந்து சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையில் அவரது கைத்தொலைபேசி காணவில்லை என தெரியவந்துள்ளது.


இரத்தினபுரி, நிரியெல்ல பகுதியைச் சேர்ந்த சச்சினி ஜினாதாரி என்ற 25 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் குறித்த யுவதி பணி நிமித்தமாக இரத்தினபுரிக்கு பேருந்தில் செல்வதற்காக காலை 06.30 க்கு வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.