தேர்தலை நடத்த பொருத்தமான தினமொன்றை அறிவித்த தேர்தல் ஆணைக்குழு!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

தேர்தலை நடத்த பொருத்தமான தினமொன்றை அறிவித்த தேர்தல் ஆணைக்குழு!


எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதுதொடர்பான ஆலோசனைகளை அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அந்த ஆணைக்குழு வழங்கியுள்ளது.


முன்னதாக, எதிர்வரும் 09 ஆம் திகதி அதாவது நாளை மறுதினம் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டிருந்தது.


எவ்வாறாயினும், திறைசேரியிலிருந்து தேர்தல் நடவடிக்கைகளுக்கு போதியளவு நிதி வழங்கப்படாமை உள்ளிட்ட காரணங்களால், உள்ளூராட்சி தேர்தல், திகதி குறிப்பிடப்படாமல் பிற்போடப்பட்டது.


இந்தநிலையில், எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.