திருமண வைபவத்தில் கைகலப்பு! ஒருவர் பலி ஐவர் வைத்தியசாலையில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருமண வைபவத்தில் கைகலப்பு! ஒருவர் பலி ஐவர் வைத்தியசாலையில்!

அங்குருவத்தோட்ட, படகொட சந்தியில் நேற்றிரவு (17) இரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்து 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

36 வயதுடைய உயிரிழந்தவரின் சடலம் இன்று அதிகாலை படகொட பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களைச் சேர்ந்த 5 பேர் கொழும்பு, நாகொட மற்றும் ஹொரணை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

படகொட பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை, அங்குருவத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.