நாட்டில் இன்று தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இன்று தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!


உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.


இதன்படி, இன்றையதினம் (01) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 656,688 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்ற போதிலும் கடந்த ஒரு சில நாட்களாக சிறு வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.


இந்நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 185,350 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,200 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.


எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.