பேராதனை பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேராதனை பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!


பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த மாணவி அதிகளவு மருத்துவ மாத்திரைகளை உட்கொண்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குறித்த மாணவி நேற்று (28) பல்கலைக்கழகத்தின் மலசேகர விடுதியில் உள்ள தனது விடுதி அறைக்குள் சுகவீனமடைந்த நிலையில் அவரது நண்பர்களால் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


எனினும் இன்று அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 


மேலும் அவர் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.