அதிக புகை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் வெளியான எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிக புகை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் வெளியான எச்சரிக்கை!


அதிகமாக புகையை வெளியேற்றும் வாகனங்கள் குறித்து அறிவிக்குமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


இதற்கமைய, 070 350 0525 என்ற வாட்ஸாப் செயலி இலக்கத்திற்கு பொது மக்கள் தகவலளிக்க முடியும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.


ஒவ்வொரு மாதத்தின் இறுதி வாரத்தில் கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பகுதியில் தனியார் பேரூந்துகளுக்கு புகை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது 40 வீதமான பேரூந்துகள் தகுதியை பெறவில்லை என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


கடந்த சில வருடங்களாக அதிகமாக புகையை வெளியேற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புகைப் பரிசோதனையில் தகுதியற்ற வாகனமாக இனங்காணப்படும் பட்சத்தில் குறித்த வாகனத்தின் உரிமையாளர் வேரஹெர பிரதான அலுவலகத்திற்கு வருகைத்தர வேண்டும். வருகைத் தராவிட்டால் அவருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.


அதனையும் வாகன உரிமையாளர் பொருட்படுத்தவில்லையாயின் வழமையான முறையில் வாகன வருமான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியாத வகையில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படுவர் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.