தற்காலிகமாக கைவிடப்படவுள்ள தொழிற்சங்க போராட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்காலிகமாக கைவிடப்படவுள்ள தொழிற்சங்க போராட்டம்!

நாடளாவிய ரீதியில் இன்று (15) காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை, நாளை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


அதன்படி, நாளை (16) காலை 8.00 மணிக்கு தற்காலிகமாக கைவிடப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வரி விதிப்புக்கு எதிராக, தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கங்கள், கடந்த 09 ஆம் திகதிமுதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.


இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இந்த தொழிற்சங்கம் நடவடிக்கையில் இணைந்திருந்தது.


அதற்படி, குறித்த சங்கத்தினால் அன்றைய தினம் 4 மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


இந்நிலையில், திங்கட்கிழமை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், தமது கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வு வழங்கப்படாததால் நேற்றைய தினம் எஞ்சிய 05 மாகாணங்களிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.


எனினும், தொடர்ந்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழுவின் உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.


இந்நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் கோரிக்கைகள் அடங்கிய பிரேரணையொன்று இன்று ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.


அந்த பிரேரணைக்கு ஜனாதிபதி செயலகம் அனுப்பியிருந்த பதில் கடிதத்தில் உள்ளடங்கியிருந்த சமிக்ஞைகள் குறித்து கவனம் செலுத்திய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு, தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை நாளை காலை 8 மணியுடன் தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது.


எவ்வாறாயினும், அரசாங்கத்தின் வரி விதிப்புக்கு எதிரான தமது சங்கத்தின் போராட்டம் தொடரும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.