இலங்கையுடன் தொடர்பைக் கொண்ட சிம்பாப்வே ராஜந்திரியின் மீது தங்கக்கடத்தல் குற்றச்சாட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையுடன் தொடர்பைக் கொண்ட சிம்பாப்வே ராஜந்திரியின் மீது தங்கக்கடத்தல் குற்றச்சாட்டு!


இலங்கையுடன் 2020- 22ஆம் ஆண்டுகளில் தொடர்புகளை கொண்டிருந்த சிம்பாப்வேயின் மிகவும் செல்வாக்கு மிக்க இராஜதந்திரிகளில் ஒருவரான யூபெர்ட் ஏஞ்சல் (Uebert Angel) தமது தகுதியை பயன்படுத்தி தங்கக் கடத்தல் திட்டத்தின் மூலம் மில்லியன் டொலர்களை சலவைச் செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


அல் ஜசீரா செய்திச்சேவை புலனாய்வு தகவலாக இதனை வெளியிட்டுள்ளது.


2021 ஆம் ஆண்டு சிம்பாப்வேயின் அரச அதிபர் எம்மர்சன் மனங்காக்வாவால் (Emmerson Mnangagwa) அவர் துாதராகவும் நியமிக்கப்பட்டார்.


இந்நிலையில் தனது இராஜதந்திர தகுதியைப் பயன்படுத்தி நாட்டிற்கு அதிக அளவு அழுக்கான பணத்தை எடுத்து வரமுடியும் என்று செய்தியாளர்கள் மத்தியில் அந்த காலக்கட்டத்தில் தெரிவித்திருந்தார்.


அவர் இலங்கைக்கு வந்தபோது இலங்கையின் சர்ச்சைக்குரிய தீர்க்கதரிசியாக கூறிக்கொள்ளும் ஜெரோம் பெர்ணான்டோவை சந்தித்தார்.


15 நாடுகளில் கிளைகளைக் கொண்ட குட் நியூஸ் சேர்ச் என்ற அமைப்புக்கு தாம் தீர்க்கதரிசி என்று கூறிக்கொண்டு ஒரு சபைக்கு தலைமை தாங்கும் 44 வயதான அவர், சிம்பாப்வேயின் தங்கத்திற்கு கணக்கில் காட்டப்படாத பணத்தை மாற்றக்கூடிய திட்டத்தை எளிதாக்குவதாகவும் குறி்ப்பிட்டிருந்தார் என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.