மர்மமான முறையில் உயிரிழந்த 6 வயது சிறுமி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மர்மமான முறையில் உயிரிழந்த 6 வயது சிறுமி!


பாணந்துறை - ஹிரண, பின்கெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (07) பிற்பகல் 6 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹிரண காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


தாய் மற்றும் தாயின் சட்டரீதியற்ற கணவருடன் வசித்து வந்த குறித்த சிறு பல நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


சிறுமி இதற்கு முன்னர் பல தடவைகள் தாயின் துணைவரால் தாக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கேட்டல் மற்றும் பேச்சு குறைபாடுகளை கொண்ட இந்த சிறுமியின் உடலில் பல தழும்புகள் மற்றும் வீக்கங்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


இந்த மரணம் தொடர்பாக சிறுமியின் தாயான 25 வயதான பெண்ணொருவரும், அவரது கணவர் எனக்கூறப்படும் 29 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்


சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில - கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள.


மேலும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.