
"நமோ நமோ மாதா - நூற்றாண்டுக்கு ஒரு படி" என்ற தொனிப்பொருளின் கீழ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, இந்த வருடத்தின் 75வது சுதந்திர தின விழாவை இன்று (04) காலி முகத்திடல் சதுக்கத்தில் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்தின் பிரதான நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை 8.30 மணிக்கு காலிமுகத்திடல் மைதானத்தில் ஆரம்பமாகின.