குப்பை கூழத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்! இருவர் காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குப்பை கூழத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்! இருவர் காயம்!


மொரட்டுவை - கல்தேமுல்ல பிரதேசத்தில் குப்பை கூழமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்கிசை காவல்துறையினர் தெரிவித்தனர்.


சம்பவத்தில் தம்பதியொன்றே காயமடைந்துள்ளனர் என்றும் அவர்களது மகளின் முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் இடத்துக்குச் சென்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


முறைப்பாட்டாளரின் தாயும் தந்தையும் தமது வீட்டிற்கு அருகில் உள்ள குப்பை மேட்டில் தீ வைத்ததாகவும், அங்கு பெரும் சத்தத்துடன் இனந்தெரியாத பொருளொன்று வெடித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


அங்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், வெடித்த பொருள் என்பதை கண்டறிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


வெடிப்பு சம்பவத்தில் பெண்ணின் இடுப்பு மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆணின் கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.