இலங்கையில் மீண்டும் நில அதிர்வு பதிவு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் மீண்டும் நில அதிர்வு பதிவு!!


புத்தல, வெல்லவாய பகுதிகளில் இன்று (22) முற்பகல் மீண்டும் சிறு நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.


இது ரிக்டர் அளவீட்டு கருவியில் 3.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.


வெல்லவாயவை அண்மித்த பகுதியில், 7 கிலோமீற்றர் ஆழத்தில், இலங்கை நேரப்படி 11.44 அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.


இதேவேளை, கடந்த 10 ஆம் திகதி இலங்கையின் தென்கிழக்கு நகரங்களில் 3.0 மெக்னிடியூட் அளவில் சிறிய நில அதிர்வு ஏற்பட்டது. எனினும் அதனால் எந்த ஆபத்துகளும் ஏற்பட்டிருக்கவில்லை.


இது ”ஓர் அதிர்வு மட்டுமே, பூகம்பம் அல்ல” என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிக்கையில் தெரிவித்ததது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.