advertise here on top
Join YazhNews WhatsApp Community

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!


சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2020 -2021ஆம் ஆண்டு மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்களுக்கு காலவரையின்றி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, இந்த மாணவர்களை இன்று மாலை 4.00 மணிக்குள் விடுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சப்ரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மோதலில் பாதிக்கப்பட்ட 09 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.