நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு தேயிலை வழங்கிய இலங்கை அரசு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு தேயிலை வழங்கிய இலங்கை அரசு!

துருக்கியில் 20,665 பேர் உயிரிழந்துள்ள ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக இலங்கை தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களின் அனுசரணையுடன் அரசாங்கம் நேற்று (10) கொழும்பில் உள்ள துருக்கிய தூதுவருக்கு “சிலோன் டீ” ஒரு தொகுதியை அன்பளிப்பாக வழங்கியதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள துருக்கி தூதரகத்தில் வெளியுறவு அமைச்சகத்தின் அவசரகால பதிலளிப்பு பணிப்பாளர் நாயகம் O.L அமீர் அஜ்வாட் அவர்களால் துருக்கி தூதுவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேயிலை சபை என்பனவற்றினால் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பாவுக்கான பணிப்பாளர் நாயகம் பிரியங்கிகா தர்மசேன, இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் மற்றும் இலங்கை தேயிலை சபையின் ஊக்குவிப்பு பணிப்பாளர் பவித்ரி பீரிஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.