சமூக ஆர்வலரான சிரந்த அமரசிங்க கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சமூக ஆர்வலரான சிரந்த அமரசிங்க கைது!


சிவில் சமூக ஆர்வலர் சிரந்த அமரசிங்க கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் நேற்று (27) மாலை கொழும்பில் புலனாய்வுத்துறை தலைமையகத்திற்கு அருகில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.


கைது செய்யப்பட்ட சிரந்த அமரசிங்க, கறுவாத்தோட்டம் காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டதாகவும், பின்னர் போலிக்குற்றச்சாட்டுக்களில் காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்தார்.


ஏலவே கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ' கோட்டா ஃபெயில்' என்ற வாசகத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தியதாக தெரிவித்து சிரந்த அமரசிங்க கைது செய்யப்பட்டிருந்தார்.


இந்நிலையில், தாம் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்து அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.


இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.