வரி செலுத்த தவறியுள்ள குடிமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வரி செலுத்த தவறியுள்ள குடிமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

 


உள்நாட்டு இறைவரித்திணைக்களத்திற்கு இதுவரை 20,000 கோடி ரூபாவை பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் செலுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வரி செலுத்தாதவர்களில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


வரி பாக்கிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு சில தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும்,வருவாய்களை வசூலிப்பது குறித்து அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


அத்துடன், நிலுவைத் தொகையை மீட்பதற்காக உள்ளூர் வருமான வரி கட்டளைச் சட்டம் புதுப்பிக்கப்பட்டு அதற்கேற்ப திருத்தப்படும் என்றும் சியாம்பலாபிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, அதிக வருமானம் ஈட்டும் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், ஜோசியம் சொல்பவர்கள் மற்றும் பலர் நீண்ட காலமாக வரி ஏய்ப்பு செய்து வருவதாக நிதி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.