இன்று முதல் (16) நாடளாவிய ரீதியாக தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சக்தி அமைச்சில் தற்சமயம் இடம்பெறும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துவெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இன்று முதல் திருத்தப்பட்ட மின்கட்டணம் அமுலாவதாக அவர் தெரிவித்துள்ளார்.