நாட்டில் மீண்டும் நில நடுக்கம்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

நாட்டில் மீண்டும் நில நடுக்கம்!


வெல்லவாய - புத்தல பகுதியில் இன்று (11) அதிகாலை மீண்டும் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.


இந்த நிலநடுக்கம் 2.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.


நிலநடுக்கத்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிடுகின்றது.


இதேவேளை, புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் நேற்று சிறிய நிலநடுக்கம் பதிவாகியது.


தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த தகவலை அறிவித்துள்ளது.


இதனால் எந்த ஆபத்தும் இல்லை என்றும், மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.