அனைத்து பாடசாலைகளுக்குமான விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து பாடசாலைகளுக்குமான விசேட அறிவித்தல்!


நாளை தினம் (16) அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த் குமார் எமது செய்திப் பிரிவுக்கு இதனைத் தெரிவித்தார்.


இன்றைய தினம் தைப்பொங்கல் என்பதால், நாளை திங்கட்கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்வதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது


எனினும், மூன்றாம் தவணை விடுமுறை 03 கட்டங்களாக வழங்கப்பட்டுவருவதை கருத்திற்கொண்டு நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, நாளைய தினம் வழமைபோல பாடசாலை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுமென இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.