சவூதி அரேபியாவில் ரொனால்டோவின் முதல் போட்டியே மெஸ்ஸிக்கு எதிராகவா ? வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகம் !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சவூதி அரேபியாவில் ரொனால்டோவின் முதல் போட்டியே மெஸ்ஸிக்கு எதிராகவா ? வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகம் !

ரொனால்டோ அல் நாசர் அணிக்காக தனது முதல் போட்டியிலேயே அவரின் நீண்ட நாள் போட்டியாளரான மெஸ்ஸியை எதிர்த்து விளையாடுவார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ரொனால்டோவால் அல் நாசர் அணி பங்கேற்கும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது என்ற தகவல் வெளிவந்துள்ளது. அல் நாசர் அணியில் இணையும் முன்னர் ரொனால்டோ இங்கிலாந்தில் கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடினார்.


அப்போது எவர்ட்டன் அணிக்கு எதிரான போட்டியின் போது அவரோடு புகைப்படம் எடுக்கவந்த ஆட்டிசம் குறைபாடு கொண்டு சிறுவன் ஒருவரின் கைப்பேசியை ரொனால்டோ தட்டி விட்டதால் இங்கிலாந்து கால்பந்து சம்மேளனத்தால் இரண்டு போட்டிகளில் ரொனால்டோ விளையாடக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக இனி அல் நாசர் அணிக்காக தனது முதல் போட்டியை ஜனவரி 21 அன்று தான் விளையாட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் அவர் தனது முதல் போட்டியிலேயே அவரின் நீண்ட நாள் போட்டியாளரான மெஸ்ஸியை எதிர்த்து விளையாடுவார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.