அரச நிறுவனங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வர விசேட நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச நிறுவனங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வர விசேட நடவடிக்கை!

இம்மாத இறுதிக்குள் அரச நிறுவனங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

கடந்த 31ஆம் திகதி அதிகளவான அரச ஊழியர்கள் ஓய்வுபெற்றதையடுத்து, பல அரச நிறுவனங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், ஊழியர் பற்றாக்குறையை போக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெற்றிடமான பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு சமநிலை அல்லது வெளி ஆட்சேர்ப்பு மூலம் செய்யப்பட வேண்டுமா என்பதை கணக்கிட வேண்டும் என்றும் குறிப்பிட்ட பதவிகளுக்கு பயிற்சி பெற்றவர்கள் தேவை என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

பெருந்தொகையான அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரச ஊழியர்களை சமப்படுத்த பிரதமர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.