நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறிய முஜிபுர் ரஹ்மான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறிய முஜிபுர் ரஹ்மான்!

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார்.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்காக போட்டியிடவுள்ளதால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மிகவும் வருத்தத்துடன் அறிவித்தார்.

நாளைய தினம் (21) வேட்புமனு தாக்கலுக்கான கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கட்சியின் செயற்குழு எடுத்த ஏகமானதான முடிவின் பிரகாரம் தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றுக்கு தெரிவான தனக்கு வாக்களித்த 87,000 பேருக்கும், ஒத்துழைப்பு வழங்கிய நாடாளுமன்ற பணிக்குழாமினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

அத்துடன், அமைதியான முறையில் உள்ளூராட்சி தேர்தலை நடத்த வழிவகுக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றின் சார்பாக அவருக்கு சபாநாயகர் வாழ்த்து தெரிவித்தார்.

இதேவேளை, முஜிபுர் ரஹ்மானின் பதவி விலகலால் ஏற்படும் வெற்றிடத்துக்கு முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.