ஜனாதிபதியுடனான சந்திப்பினை தொடர்ந்து மின்கட்டண உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதியுடனான சந்திப்பினை தொடர்ந்து மின்கட்டண உயர்வு!

ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் யு-டர்ன் செய்து, மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை அழைப்புகளுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனராக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழுத்தத்திற்கு இணங்க உறுப்பினர்கள் இதனை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி என்னை அழைக்காது தனது ஆணைக்குழுவின் மற்ற மூன்று உறுப்பினர்களை கூட்டத்திற்கு அழைத்து சந்தித்ததாக PUCSL தலைவர் கூறினார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு தாங்கள் உடன்படுவதாக எழுத்துமூலம் எனக்குத் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்திற்கு நான் எதிரானவன், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இவ்வாறான அரசியல் அழுத்தங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.