சிறைக் கைதிகளின் தாக்குதலுக்கு இலக்கான சேபால் அமரசிங்க!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறைக் கைதிகளின் தாக்குதலுக்கு இலக்கான சேபால் அமரசிங்க!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சேபால் அமரசிங்க தாக்கப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்கள் குழுவொன்று முறைப்பாடு செய்துள்ளது.

இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

சிறையில் உள்ள சேபால் அமரசிங்க சிறைச்சாலையில் சித்திரவதை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் குழுவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவர் தாக்கப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவ்வாறான தாக்குதல் எதுவும் இடம்பெறவில்லை என மருத்துவ ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலதா மாளிகையை அவமதித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.