கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக மேலும் 50 பிராந்திய மையங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக மேலும் 50 பிராந்திய மையங்கள்!

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக 50 பிராந்திய மையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய 4 பிராந்திய அலுவலகங்களில் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் தவிர கடவுச்சீட்டு வழங்கும் பணியை மேற்கொள்வதாகவும், கடவுச்சீட்டு வழங்கும் பணியை வினைத்திறனாக்க பிரதேச செயலகங்களில் மேலும் 50 புதிய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எந்தவொரு விண்ணப்பதாரரும் இந்த அலுவலகத்திற்குச் சென்று அவரின் பயோமெட்ரிக் (விரல் ரேகை) மற்றும் புகைப்படங்களைக் கொடுத்து, அவர்களது கடவுச்சீட்டை அவர்களின் வீட்டுக்கு பெற்றுக் கொள்ளலாம்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் உரிமையாளரின் உரிமம் உள்ளடக்கிய இலத்திரனியல் சிப் கொண்ட மின் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தவுள்ளதோடு, இது உலகின் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.