![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieBoFR02WkWDju8MtINIz_UiSgUfHwxHuTD-dgjeGaDW-3MgYcIFpKJ8pagEmj7HGUkpCIvr50G_s0oEnJeBYMrUbPsq1XGRoZJMgKIrd8Xhpo4XkLRX6Inkhsmxb-oW3bD3riF_7jmdOmYPxNEyVB8DZoLrqGr19mwZYsD4gJtVDpnT6wDD86W58EIA/s16000/4628E51C-240D-4BC5-8880-EAC8F9ADC0E2.jpeg)
தற்போது வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய 4 பிராந்திய அலுவலகங்களில் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் தவிர கடவுச்சீட்டு வழங்கும் பணியை மேற்கொள்வதாகவும், கடவுச்சீட்டு வழங்கும் பணியை வினைத்திறனாக்க பிரதேச செயலகங்களில் மேலும் 50 புதிய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எந்தவொரு விண்ணப்பதாரரும் இந்த அலுவலகத்திற்குச் சென்று அவரின் பயோமெட்ரிக் (விரல் ரேகை) மற்றும் புகைப்படங்களைக் கொடுத்து, அவர்களது கடவுச்சீட்டை அவர்களின் வீட்டுக்கு பெற்றுக் கொள்ளலாம்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் உரிமையாளரின் உரிமம் உள்ளடக்கிய இலத்திரனியல் சிப் கொண்ட மின் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தவுள்ளதோடு, இது உலகின் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படும். (யாழ் நியூஸ்)